Photobucket
Tdc Election :

இந்தியிலும் காதலில் சொதப்புவது எப்படி!

Kadhalil Sodhappuvadhu Yeppadi in hindi டைரக்டர் பாலாஜி மோகன் இயக்கத்தில் உருவான படம் காதலில் சொதப்பவது எப்படி. சித்தார்த் - அமலாபால் இணைந்து நடித்த இப்படம் சத்தம் இல்லாமல் வெற்றிகரமாக ஓடி ஹிட் லிஸ்டில் இணைந்தது. இப்போது இந்த படத்தை இந்தியில் இயக்க படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். படத்தை இயக்குவது அதே இயக்குனர் பாலாஜிதானாம். ஆனால் படத்தில் நாயகன், நாயகியாக யாரை போடுவது என்று பரிசீலனை நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதைக் கேள்விப்பட்ட அமலா பால், உடனே இயக்குனரைத் தொடர்பு கொண்டு, இந்தியிலும் நானே நடிக்க விரும்புகிறேன், வேறு யாரையும் முடிவு செய்து விட வேண்டாம் என்று கேட்டுக் கொண்டாராம். ஆனால் இயக்குனர் அதற்கு உறுதி அளித்துள்ளாரா? என்பது தெரியவில்லை.

விஸ்வரூபம் பட முன்னோட்டம் அடுத்த மாதம் வெளியீடு!


 விஸ்வரூபம் படத்தின் முன்னோட்டம் அடுத்த மாதம்   சிங்கப்பூரில்
Kamals vishwaroopam preview to be release in singapore நடைபெறவுள்ள சர்வதேச இந்திய திரைப்பட விருது வழங்கும் விழாவில் வெளியிடப்பட இருக்கிறது என்று நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.  இதுபற்றி அவர் கூறுகையில், என் இயக்கம் மற்றும் துணை தயாரிப்பில் உருவாகியிருக்கும் விஸ்வரூபம் படத்தின் முன்னோட்டம், ஜுன் 2012ல் சிங்கப்பூரில் நடைபெற உள்ள 13வது சர்வதேச இந்திய திரைப்பட விருது வழங்கும் விழாவில் முதல் முறையாக திரையிடப்பட இருக்கிறது.

விஸ்வரூப் என்று பெயரிடப்பட்டுள்ள இந்தி பதிப்பின் முன்னோட்டம், ரபல்ஸ் நகர கன்வென்ஷன் மையத்தில் ஜுன் 8ம்தேதி முதல்முறையாக வெளியிடப்பட உள்ளது. என்னுடன் ராகுல் போஸ், ஆன்ட்ரியா ஜெர்மியா, பூஜா குமார், ஜெய்தீப் லாவத், சாம்ராட் சக்கரவர்த்தி, ஜெரினா வகாப், சேகர் கபூர் ஆகியோரின் சிறப்பு தோற்றத்துடன் இந்த படம் உருவாகி உள்ளது. ஜுன் 7 முதல் 9 வரையிலான தேதிகளில் சிங்கப்பூர் லயன் சிட்டியில் விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. 3 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், ஸ்ரேயா, தெலுங்கு பட அதிபர்கள் கே.எஸ்.ராமாராவ், சுரேஷ்பாபு, அல்லு அரவிந்த் மற்றும் பலர் பங்கேற்கிறார்கள். பிரபுதேவாவின் நடன நிகழ்ச்சியும் நடைபெற இருக்கிறது, என்றார்.

மே மாதம் 16ம் திகதி பொட்டம்மானை நான் பார்த்தேன் !




தமிழீழ தேசிய தலைவர் பிரபாகரன் அவர்களுக்கு, நீண்ட நாட்களாகப் பாதுகாப்பு வழங்கிவரும் படையணியாக இம்ரான் பாண்டியன் படையணி இருந்தது யாவரும் அறிந்த ஒரு விடையம். இது இராணுவத்துக்கும் தெரிந்த தகவல் தான். தலைவரின் பாதுகாப்பை இப்படையணியூடாகப் பாதுகாத்து வந்தவர்களுள் மிக முக்கிய நபராக சொர்ணம் கருதப்படுகிறார். ஆனால் பலர் அறிந்திருக்காத விடையம் ஒன்று உள்ளது, ஏன் ..விடுதலைப் புலிகள் உறுப்பினர்கள் பலர் கூட இதனை அறிந்திருக்கவில்லை எனலாம். அது என்னவென்றால் 2002ம் ஆண்டு இம்ரான் பாண்டியன் படையணி பிரிக்கப்பட்டு, அதில் உள்ள சிலரைக் கொண்டு ராதா வான்காப்பு படையணி பலப்படுத்தப்பட்டது. பின்னர் அப்படையணியே தலைவரின் பாதுகாப்பை கவனித்துவந்தது.

இவர்களுக்கே சைவர் (0 0) இலக்கத்தில் ஆரம்பிக்கும் தகடுகள் வழங்கப்பட்டது. (விடுதலைப் புலிகள் தங்கள் கழுத்தில் நச்சுக் குப்பியோடு சேர்த்து இத் தகடுகளை அணிந்திருப்பது வழக்கம்) இவ்வாறு சைவர் தகடுகள் வழங்கப்பட்ட போராளிகளே முள்ளிவாய்க்கால்வரை தேசிய தலைமையை பாதுகாத்து வந்துள்ளனர். 2009ம் ஆண்டு மே மாதம் 16ம் திகதி பொட்டம்மானை தான் கண்டு அவரோடு பேசியதாக, சைவர் இலக்க தகட்டுடன் போராடி பின்னர் மீண்டு வந்துள்ள போராளி ஒருவர் அதிர்வுக்குத் தெரிவித்தார். முள்ளிவாய்க்காலில் இருந்து, நந்திக்கடல் பக்கமாகச் செல்ல ஒரு பாதை இருப்பதாகவும், அப்பாதையில் உண்டியல் பிள்ளையார் கோயில் என்று ஒரு கோவில் இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். கறுப்பு நிறம் கொண்ட, சேறு சகதிகளில் செல்லக்கூடிய மோட்டார் சைக்கிளில் வந்த பொட்டு அம்மான், கடல் மூடப்பட்டுவிட்டதா என்று தன்னிடம் கேட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதனூடாக, ஆனந்தபுரம் சமருக்குப் பின்னர், பொட்டம்மானை தாம் காணவில்லை என்றும், முள்ளிவாய்க்கால் பகுதியில் பொட்டம்மான் இருக்கவில்லை என்ற கூற்றுக்களில் உண்மை இல்லை என்பது தெளிவாகிறது. ராதா வான்காப்பு படைப்பிரிவில் இருந்து சிலர் மற்றும் தலைவரின் மகனின் பாதுகாப்பு பிரிவில் இருந்து சிலரும் சேர்ந்து ஒரு குழுவாகச் சென்று, இராணுவ முற்றுகையை உடைத்து வெளியேற முற்பட்டுள்ளனர். இந் நிலையில் அவர்களை இராணுவம் சுற்றிவளைத்துவிட்டது. (இதில் தலைவரின் மகன் சாள்ஸும் அடங்குவார்) இக் குழுவில் இருந்த எழில் வண்ணன் என்பவர், தனது சட்டலைட் தொலைபேசியூடாக டென்மார்க்கில் உள்ள உற்ற நண்பரைத் தொடர்புகொண்டு, தாம் சுற்றிவளைக்கப்பட்டதை விபரித்துள்ளார். அச் சுற்றிவளைப்பில் இருந்து தாம் தப்பிக்க முடியாது எனவும், எல்லாம் முடிந்துவிட்டது... ஆனால் போராட்டத்தை புலம்பெயர் மக்களே இனிக் கொண்டு நடத்தவேண்டும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

முள்ளிவாய்க்கால் கடற்பரப்பில் இருந்து, தன்னுடன் பேசிவிட்டு புறப்பட்ட பொட்டம்மானைப் பார்த்து என்ன செய்யப்போகிறீர்கள் என நான் கேட்டேன். போராடுவோம் இறுதிவரை போராடுவோம். கடல் மூடப்பட்டால், பிறிதொரு பகுதியை உடைக்க முடியும் என்று சற்றும் மனம் தளராதவராய் அவர் கூறிவிட்டு, நந்திக்கடல் பக்கமாகச் சென்றார் என்று சைவர் இலக்க தகடு கொண்ட போராளி ஒருவர் மேலும் தெரிவித்தார். தேசிய தலைவரின் பாதுகாப்பை உறுதிப்படுத்த சுமார் 600க்கும் மேற்பட்ட போராளிகள் காத்திருந்ததாகவும் அவர் குறிப்பிடுகிறார். அவர்கள் அனைவரும் இலக்கை அடைந்தார்களா என்பது தான் தனக்குத் தெரியவில்லை என்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். எது எவ்வாறு இருப்பினும் பொட்டம்மான் குறித்து முன்னர் வெளியான பல தகவல்கள் பிழையானவை என்பது மட்டும் தற்போது நிரூபனம் ஆகியுள்ளது எனலாம். அவர் தேசிய தலைவரோடு முள்ளிவாய்க்காலில் நின்றிருந்தது உறிதிப்படுத்தப்பட்டுள்ளது.





 

© Copyright TdcElection 2012 | Design by | Powered by TamilDesamTeam .